@hilmi.sb: Subuh Lereno Dilut. #fyppppppppppppppppppppppp #tragamaniaindonesia #fypシ゚viral #fypage

HT_
HT_
Open In TikTok:
Region: ID
Thursday 25 July 2024 03:00:48 GMT
6131
1283
2
14

Music

Download

Comments

_pemudatrans_
_pemudatrans_ :
Menyala maskuuu🔥🔥🤟🤟
2024-07-25 05:36:28
1
To see more videos from user @hilmi.sb, please go to the Tikwm homepage.

Other Videos

அமிர்தபரி பூரணி நளினவிழி காரணி  அன்னபரி பூரணி சொர்ணமருள் பாகரி  திமிர்ததிமி திமிர்தமென நடனமிடு மகமாரி தேவர்தொழு தேவிதன் தாளினை வழுத்தத்  குமிர்தநல் வாயுவும் மருதமுமிரு புயமும்  குடவயிறு நுதல் விழியும் உடைய மார்பழகும்  திமிர்தமா மும்மதத் தைந்துகர முடையதொரு  தொந்திவயி றன்சரண மென்று மென்றுநற் றுணையே.. துணையான கன்னனூர் மகமாரி யம்மைதாள்  தொழுதவர்க்கருள் கொடுத்தினிதுகந்தருள்வாய்  இணையான தெய்வங்கள் புவி மீதி லுண்டோ  உன்கிருபை தந்துநீ யெங்கள் துயர்தீர்ப்பாய்  கணையாளி கையில் தரித்தவன் தங்கையே  காவலாய் இருமென்று காத்தானை யீன்றாய்  அணையாக வந்துன் அபயமே தருவாய்  ஆதியே சோதியே மகமாரி யம்மனே.. மகமாரி யென்றுனை நினைப்பவர் தமக்கு வாதமொடு பித்தஞ் சிலேற்பனங் கண்நோய்  பகைதோஷ மானதொரு நோக்கி நோய்கிரக தீவினைகள்  பாடுபட் டோடுமுன் நாமங்கள் சொன்னால்  அகமகிழ் தஞ்சலென் றுன் கிருபை தருவாய்  அனலெனுங் கனல்தனித் தாளநினை யம்மா சக்தியே சித்தியே கமலா சனத்தியே.. கமலமுக மழுகொழுகு தெரிவையுமை யவளும் நீ கலைபல தெரிந்தருளு மரகர சிவாயம்நீ  அமலபர மேசுபரி விமலகிரு பாகரி  அரலோக பரலோக ஆனந்த ரூபிநீ  கனகமக மேருதனை வில்லாய் வளைத்தநீ  காமனொடு தக்கன் சிரந்தனை ஒடித்தநீ  அனவரத முன்கிருபை தந்திரட் சிப்பாய் அதிகவர முடையதொரு மகமாரி யம்மனே  அதிகவர முடையதொரு தவசது புரிந்தாய்  அத்தனார் கிருபை பெற் றகமிக மகிழ்ந்தாய்  மதிவதன முடையதொரு மங்கை நீருளென்ன  மாமறையுமுத்துநீ தாவென் றுரைக்க நதிபரவு பிறைசூடு நாதனும் தருளால்  நண்ணிதலு மோரொன்று சோதிக்க நல்கிச்  சதுரமுறு கனல்தணித் ததிகவர மே‌மேபெற்ற  சக்தியே கன்னனூர் மகமாரி யம்மனே... கன்னனூர் வந்தநீ கம்பையில் வளர்ந்தநீ  கரகம தெடுத்தநீ குழையது பிடித்தநீ  முன்னமே வந்தநீ  முப்புரமெரித்தநீ  மூவர்தொழு மூர்த்திநீ மூவுலகை யாண்டநீ  பன்னுமறை வேதம்நீ புன்னை நிழல் வந்தநீ  பங்கயச் செல்வி நீ பாரளந் தவளும்நீ  அன்னையே மின்னையே யெனையாள வந்த  ஆதியே சோதியே அகிலநா ரணியே.. நாரணி வால்வருண சாதனைக் காலால்  நவரத்ன நால்வேத நல்லிரத மீந்த  பூரணம தானபொற் கும்பமது வைத்து  பூவையர்கள் மலர்சொரிந் தேகவரி வீச  வாரணத் தேவர்வலு வீரர் புடை  சூழ் வாசுகி தன்னை வடமாகவே பூட்டிக்  காரணம் தானபொற் றேர்மீதி லேறிவரு  கன்னனூ ராடசிகா மாட்சியானவளே.. ஆச்சிநீ அபிராமி யாகவந் தாயே  ஐயனொடு பரிகலஞ் சூழவந் தாயே பேச்சி நீ பெருமா ளுடன் பிறந் தாயே  பேரான மீனாட்சி யாகவந் தாயே  காட்சிதந் தேசேரி காக்க வந் தாயே கனல்தணித் தினததிக வரமளித் தாயே  வளர்ச்சி சடைச்சி யென வந்தவளும் நீயே  வடிவான ஆயிரம் கன்னியானவளே.. ஆயிரம் கண்ணிநீ அகிலமுழுதான நீ  அட்சரம தானநீ அக்கினி தனித்தநீ  வேயிரு யுயத்தி வேதமுழு லானநீ  வேதாந்த ரூபிநீ வேதனை தணித்தநீ  காயுகள லாச்சிநீ காமன் சிலைச்சிநீ  கச்சினி முலைச்சிநீ காரண நிறத்திநீ  தாயும்நீ தந்தைநீ தந்திமுக னைப் பெற்ற  தையலே மகமாரி யானமா தரியே .. மாதரி புரந்தரி வரந்தரு குமாரி மாசது விலாதமதி பேலழகி னாளே  ஆதரியுள் ஆதரவிலா தொருவ ருண்டோ  ஆருதவி சேயதனை  ஆளநினை யம்மா  பாதிரி தரித்தபர நாதருட னாடும்  பாதமல ரேதுணைய தாகவருள் புரிவாய்  நாதரி நடம்புரி நலம்புரி வராகி  நரலோக பரலோக நாரியம் பிகையே.. அம்மைநீ  அமிர்தத்தி லன்றுதித் தாயே  அழகான வலரிமல ராகவந் தாயே  செம்மைநீ தேசியின் கனியுகந் தாயே  செவ்வந்தி மலர்மீது சேர்ந்திருந் தாயே  எம்மையா ளரசன்மக ளிக‌ளாகவந் தாயே  எழிலான எக்கிஷந் தனியார் தனிவளர்ந் தாயே  உண்மையாய் அக்கினி தனிலுதித் தாயே  உலகுதனி லதிகதவ மானநா யகியே.. உலகுதனில் மகமாரி யாயவ தரித்து  ஓதரிய முத்துவகை தானது வுகந்து  நலமான வீசருக் கேமுத் தெறிந்து  நாரியுமை யாய் வந்து நற்கிருபை செய்து  கலைசொரியு மாரியுரு வாகியே வந்து  காத்தானை நல்மகவ தாகவே யீன்றாய்  நலமான தொட்டிய னிடமாக வந்த  நாதனார் நாரணன் தங்கையா னவளே.. நாதனார் நான்முகன் கட்டளை யிருந்தாலும்  நாடுமோ உனையன்றி நம்பின பேர்க்கு  வேதனைகள் முடுகுமோ நோய்பிணிகளணுகுமோ வேறுமொரு துட்டப் பசாசுகள் வருகுமோ  பாதமே கதியென்று நம்பின பேர்க்கொரு  பயமுண்டோ செத்தபிண மற்றுயிர் கொள்ளாதோ  நீதியோ வுள்தனை நினைப்பவர்க்கிடறுவர்  நீதியோ சோதியே காத்தவ ராயனே.. காத்துநீ சேரிகனல் மாற்றவந் தாயே  கட்டாரி ச‌ட்ட‌சொட்டயம் கையம்பு சவளும்  மாத்திரைக் கோலுடன் சாற்றுபரி வட்டம்  மத்தள முடுக்கை தவில்மிக்கவிரு தூத  நாற்றிசைக கெங்கணுங் கீர்த்தியிசை பாட  நான்மறைக ளோதவெண் சாமரை யிரட்ட  போற்றிசெய் தேபுஸ்ப மாரிமழை பொழியவரு பூலோக ராசனே யீசுபரி பாலனே.. ஈசனுடன் நாலுமறை வேதநூல் வாழி  இந்துமதி யொத்தளகு ஈசுபரி வாழி  வீசுபுக ளுறுராச சிங்கனும் வாழி  விளைசெந்நெல் மழைபெய்து நீடூடி வாழி  வாசமுள நாடுநக ரெங்கணும் வாழி  வரிசை பெறு சைவகுல மரபுமிக வாழி  ஆசுதமிழ் குற்றம் பொறுத்து நிதம் வாழி  அமிர்தபரி பூரணி வாழவா ழியவே.............
அமிர்தபரி பூரணி நளினவிழி காரணி அன்னபரி பூரணி சொர்ணமருள் பாகரி திமிர்ததிமி திமிர்தமென நடனமிடு மகமாரி தேவர்தொழு தேவிதன் தாளினை வழுத்தத் குமிர்தநல் வாயுவும் மருதமுமிரு புயமும் குடவயிறு நுதல் விழியும் உடைய மார்பழகும் திமிர்தமா மும்மதத் தைந்துகர முடையதொரு தொந்திவயி றன்சரண மென்று மென்றுநற் றுணையே.. துணையான கன்னனூர் மகமாரி யம்மைதாள் தொழுதவர்க்கருள் கொடுத்தினிதுகந்தருள்வாய் இணையான தெய்வங்கள் புவி மீதி லுண்டோ உன்கிருபை தந்துநீ யெங்கள் துயர்தீர்ப்பாய் கணையாளி கையில் தரித்தவன் தங்கையே காவலாய் இருமென்று காத்தானை யீன்றாய் அணையாக வந்துன் அபயமே தருவாய் ஆதியே சோதியே மகமாரி யம்மனே.. மகமாரி யென்றுனை நினைப்பவர் தமக்கு வாதமொடு பித்தஞ் சிலேற்பனங் கண்நோய் பகைதோஷ மானதொரு நோக்கி நோய்கிரக தீவினைகள் பாடுபட் டோடுமுன் நாமங்கள் சொன்னால் அகமகிழ் தஞ்சலென் றுன் கிருபை தருவாய் அனலெனுங் கனல்தனித் தாளநினை யம்மா சக்தியே சித்தியே கமலா சனத்தியே.. கமலமுக மழுகொழுகு தெரிவையுமை யவளும் நீ கலைபல தெரிந்தருளு மரகர சிவாயம்நீ அமலபர மேசுபரி விமலகிரு பாகரி அரலோக பரலோக ஆனந்த ரூபிநீ கனகமக மேருதனை வில்லாய் வளைத்தநீ காமனொடு தக்கன் சிரந்தனை ஒடித்தநீ அனவரத முன்கிருபை தந்திரட் சிப்பாய் அதிகவர முடையதொரு மகமாரி யம்மனே அதிகவர முடையதொரு தவசது புரிந்தாய் அத்தனார் கிருபை பெற் றகமிக மகிழ்ந்தாய் மதிவதன முடையதொரு மங்கை நீருளென்ன மாமறையுமுத்துநீ தாவென் றுரைக்க நதிபரவு பிறைசூடு நாதனும் தருளால் நண்ணிதலு மோரொன்று சோதிக்க நல்கிச் சதுரமுறு கனல்தணித் ததிகவர மே‌மேபெற்ற சக்தியே கன்னனூர் மகமாரி யம்மனே... கன்னனூர் வந்தநீ கம்பையில் வளர்ந்தநீ கரகம தெடுத்தநீ குழையது பிடித்தநீ முன்னமே வந்தநீ முப்புரமெரித்தநீ மூவர்தொழு மூர்த்திநீ மூவுலகை யாண்டநீ பன்னுமறை வேதம்நீ புன்னை நிழல் வந்தநீ பங்கயச் செல்வி நீ பாரளந் தவளும்நீ அன்னையே மின்னையே யெனையாள வந்த ஆதியே சோதியே அகிலநா ரணியே.. நாரணி வால்வருண சாதனைக் காலால் நவரத்ன நால்வேத நல்லிரத மீந்த பூரணம தானபொற் கும்பமது வைத்து பூவையர்கள் மலர்சொரிந் தேகவரி வீச வாரணத் தேவர்வலு வீரர் புடை சூழ் வாசுகி தன்னை வடமாகவே பூட்டிக் காரணம் தானபொற் றேர்மீதி லேறிவரு கன்னனூ ராடசிகா மாட்சியானவளே.. ஆச்சிநீ அபிராமி யாகவந் தாயே ஐயனொடு பரிகலஞ் சூழவந் தாயே பேச்சி நீ பெருமா ளுடன் பிறந் தாயே பேரான மீனாட்சி யாகவந் தாயே காட்சிதந் தேசேரி காக்க வந் தாயே கனல்தணித் தினததிக வரமளித் தாயே வளர்ச்சி சடைச்சி யென வந்தவளும் நீயே வடிவான ஆயிரம் கன்னியானவளே.. ஆயிரம் கண்ணிநீ அகிலமுழுதான நீ அட்சரம தானநீ அக்கினி தனித்தநீ வேயிரு யுயத்தி வேதமுழு லானநீ வேதாந்த ரூபிநீ வேதனை தணித்தநீ காயுகள லாச்சிநீ காமன் சிலைச்சிநீ கச்சினி முலைச்சிநீ காரண நிறத்திநீ தாயும்நீ தந்தைநீ தந்திமுக னைப் பெற்ற தையலே மகமாரி யானமா தரியே .. மாதரி புரந்தரி வரந்தரு குமாரி மாசது விலாதமதி பேலழகி னாளே ஆதரியுள் ஆதரவிலா தொருவ ருண்டோ ஆருதவி சேயதனை ஆளநினை யம்மா பாதிரி தரித்தபர நாதருட னாடும் பாதமல ரேதுணைய தாகவருள் புரிவாய் நாதரி நடம்புரி நலம்புரி வராகி நரலோக பரலோக நாரியம் பிகையே.. அம்மைநீ அமிர்தத்தி லன்றுதித் தாயே அழகான வலரிமல ராகவந் தாயே செம்மைநீ தேசியின் கனியுகந் தாயே செவ்வந்தி மலர்மீது சேர்ந்திருந் தாயே எம்மையா ளரசன்மக ளிக‌ளாகவந் தாயே எழிலான எக்கிஷந் தனியார் தனிவளர்ந் தாயே உண்மையாய் அக்கினி தனிலுதித் தாயே உலகுதனி லதிகதவ மானநா யகியே.. உலகுதனில் மகமாரி யாயவ தரித்து ஓதரிய முத்துவகை தானது வுகந்து நலமான வீசருக் கேமுத் தெறிந்து நாரியுமை யாய் வந்து நற்கிருபை செய்து கலைசொரியு மாரியுரு வாகியே வந்து காத்தானை நல்மகவ தாகவே யீன்றாய் நலமான தொட்டிய னிடமாக வந்த நாதனார் நாரணன் தங்கையா னவளே.. நாதனார் நான்முகன் கட்டளை யிருந்தாலும் நாடுமோ உனையன்றி நம்பின பேர்க்கு வேதனைகள் முடுகுமோ நோய்பிணிகளணுகுமோ வேறுமொரு துட்டப் பசாசுகள் வருகுமோ பாதமே கதியென்று நம்பின பேர்க்கொரு பயமுண்டோ செத்தபிண மற்றுயிர் கொள்ளாதோ நீதியோ வுள்தனை நினைப்பவர்க்கிடறுவர் நீதியோ சோதியே காத்தவ ராயனே.. காத்துநீ சேரிகனல் மாற்றவந் தாயே கட்டாரி ச‌ட்ட‌சொட்டயம் கையம்பு சவளும் மாத்திரைக் கோலுடன் சாற்றுபரி வட்டம் மத்தள முடுக்கை தவில்மிக்கவிரு தூத நாற்றிசைக கெங்கணுங் கீர்த்தியிசை பாட நான்மறைக ளோதவெண் சாமரை யிரட்ட போற்றிசெய் தேபுஸ்ப மாரிமழை பொழியவரு பூலோக ராசனே யீசுபரி பாலனே.. ஈசனுடன் நாலுமறை வேதநூல் வாழி இந்துமதி யொத்தளகு ஈசுபரி வாழி வீசுபுக ளுறுராச சிங்கனும் வாழி விளைசெந்நெல் மழைபெய்து நீடூடி வாழி வாசமுள நாடுநக ரெங்கணும் வாழி வரிசை பெறு சைவகுல மரபுமிக வாழி ஆசுதமிழ் குற்றம் பொறுத்து நிதம் வாழி அமிர்தபரி பூரணி வாழவா ழியவே.............

About