@healthyglow123bynishra: தலைப் பொடுகு என்பது ஒரு தோலின் நிலை இது உச்சந்தலையில் இருக்கும் வெள்ளை சாம்பல் நிற உலர்த்தோல் செதில்களாக வளர காரணமாயிருக்கிறது. இது உச்சந்தலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சமமாக ஏற்படும் ஒரு பொதுவான நிலையே. இது தனிநபர்களின் சகஜமான வாழ்க்கையில் பாதிப்பேற்படுத்தும் சந்தோஷமற்ற நிலையாக இருக்கிறது. தலைப் பொடுகின் ஆக்கிரமிப்பு பெண்களை விட ஆண்களிடமே அதிகளவில் இருக்கிறது. உலகளவில், சுமார் 50% மக்களுக்கு தலைப் பொடுகு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுப்படையாக நிலவுகின்ற இந்த நோய்த்தாக்கமானது இந்தியாவில் 195,785,036 பேருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. *இதன் முக்கிய காரணங்கள் என்ன?* தலைப் பொடுகு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு: அழற்சியுற்ற அல்லது எரிச்சலுடைய பிசுக்குள்ள தோல். குறைவான ஷாம்பூ பயன்பாடு. மலசீஸியா பூஞ்சை தொற்று உச்சந்தலையில் உள்ள ஆயில்களை உறிஞ்சி மேலும் அதிகமான தலைப் பொடுகு ஏற்பட காரணமாக இருக்கிறது. வறண்ட சருமம். சிகை பொருட்களினால் ஏற்படும் ஒவ்வாமை. ஆபத்து விளைவிக்கும் காரணிகள் பின்வருமாறு: வயது: வயதுவந்த இளம் பருவத்திலோ அல்லது பருவமடைந்த வயதிலிருந்தோ நடுத்தர வயது வரை இருக்கலாம். ஆண் பாலினம்: ஆண் ஹார்மோன் செல்வாக்கினால் ஏற்படலாம். அதிகப்படியான எண்ணெய்ச் சுரப்பி மெழுகு: மலசீஸியா பூஞ்சை தொற்றுநோய் உச்சந்தலையிலிருந்து அதிக எண்ணெயை உறிஞ்சி மேலும் அதிகமான தலைப் பொடுகு ஏற்பட காரணமாக இருக்கிறது. சில நோய்கள்: பார்கின்சன்'ஸ் நோய் (ஒரு நரம்பு கோளாறு) மற்றும் ஹெச்.ஐ.வி தொற்று.