@annaimagan: ஆற்றங்கரை வேலவனே ஆறாத மனதில் ஏன் சோகங்களே அசுரர் பகை வென்ற ஆண்டவனே எம் இன கதறலும் இன்னும் கேட்கலையோ ஆண்டுகள் பல ஆன போதும் நீ ஆண்டியாய் நிற்பதில் ஞாயமில்லை தேவர் குலம் காக்க வேல் தாங்கி வந்தவன் நீ உந்தன் தமிழனம் காக்க மறந்தனையோ பிரணவப் பொருள் அறியா பிரம்மனையே சிறைவைத்த பாலகனே எம்மை அறிந்த குருநாதன் நீயே தமிழ்வாழ வழி தருவதில் ஏனோ தயக்கம் படை கொண்டு தமிழ்க்குடி காத்த மன்னவனும் கையோங்க வழி நீயே தரவில்லையே எங்கெங்கோ வசைபாடி இனவாதம் உன் அப்பனுக் குரித்தான பூமியே நாசம் தென்னாடு தொட்டு வந்த தமிழ் எப்பாடு பட்டாலும் எனக்கென்ன என்று குன்றிலே நின்று பாராதே நீ இருக்கும் இடம் கூட நாளை வந்தமர்வான் அவன் சித்தார்த்தன்.😡 அன்னைமகன்.