@ramanan60: ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா 🔱🙏 அருள்மிகு முருகப் பெருமானின் இனிய பக்திப் பாடல்) கல்லாகக் கிடந்த மனம் பூவாக மலர்ந்த விதம் கந்தா உன் கருணையன்றோ; நான் எல்லாம் இழந்த பின்னும் ஜீவன் இருப்பதிங்கே வேலா உன்னருளாலன்றோ; கோடிபணம் இருந்தாலும் மேலுமதை தேடுகின்ற மானிடர்கள் கூட்டம் நடுவே; மனம் தேடி உனைத்திரிந்தபடி திருப்புகழை பாடுமெனை நாடி வந்து காத்த குருவே; ஆசையெனும் தூண்டிலிலே மாட்டிக்கொண்ட என்மனதை இதமாக மீட்ட முருகா; மோகமெனும் தீச்சுழலில் முங்கிவிட இருந்தஎனை முழுதாக காத்த இறைவா ; முழுதாக காத்த இறைவா; கோவை கமலா காவியா வி. கிஷோர்குமார் #KovaiKamala #MuruganDevotional #TamilDevotionalSongs #AarupadaiVeedu #VelVelMuruga