@st.suman.report: யாழ். நயினாதீவில் படகு விபத்து - பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி பலி தனியார் படகு மூலம் நயினாதீவிலிருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை நோக்கிப் பயணித்த போது, படகு கவிழ்ந்ததில் பாடசாலை அதிபர் ஒருவர் நீரில் மூழ்கி இன்று (28) மாலை உயிரிழந்துள்ளார். நயினாதீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நடராசா மயூரன் (வயது 48) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவர் நயினாதீவு ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலை ஒன்றிலிருந்து இடமாற்றம் பெற்று, அண்மையிலேயே நயினாதீவு ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, தற்போது நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். #Jaffna