@eriya.ko.kumar: “என் இனிய தமிழ் மக்களே…” என்று ஒரு குரல் தொடங்கியபோது திரை உலகம் மட்டும் இல்லை நம்முடைய கிராமங்களும் பேசத் தொடங்கின. அந்தக் குரலில் மண் வாசனை இருந்தது வெயிலின் வெப்பமும், வயல் வரிசையின் நிசப்தமும் இருந்தது. இன்று… அந்தக் குரல் மௌனமாயிற்று திரையின் விளக்குகள் அணைந்தன ஆனால் அவர் உருவாக்கிய வாழ்க்கை இன்னும் நம்முள் ஓடிக்கொண்டே இருக்கிறது. பாரதிராஜா — கிராமத்தை கதையாக்கியவர் மனித உணர்வை திரையாக்கியவர் இன்று இயற்கையின் மடியில் அமைதியாக உறங்குகிறார். ஆனால் ஐயா… உங்கள் காட்சிகள் மட்டும் என்றும் விழித்திருக்கும் தமிழ் சினிமாவின் இதயத்தில். ஈழத் தமிழர்கள் மேல் அளவு கடந்த பாசம் வைத்து இருந்தவர் இயற்கையின் மடியில் உறங்குங்கள் ஐயா 🙏