@qknews0: 💥 புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சத்திரம் குளத்து வாரியில் கட்டப்பட்டிருந்த வீடுகள், அரசு உத்தரவின்படி ஜேசிபி (JCB) இயந்திரம் கொண்டு தரைமட்டமாக இடிக்கப்பட்டன. இதனால் தங்களது வாழ்வாதாரத்தையும், தங்குமிடத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் பொதுமக்கள், "புள்ளைங்க பேச்சைக் கேட்டு விஜய்க்கு ஓட்டு போட்டோம்... இப்போ வீடு இல்லாம நிக்கிறோம்" என்று மிகுந்த வேதனையுடனும் கண்ணீருடனும் புலம்பி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Pudukkottai #Vijay #TrendingNews #TamilNadu #qknews