@wwwmadhan.com: இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கோபத்தை வெளிப்படுத்த சொற்களை விட நீ துலக்கும் பாத்திரங்களை தான் அதிகம் நம்பியிருக்கிறாய் வேறு ஏதோ ஒன்றில் மூழ்கியிருப்பதாக நான் நடித்தாலும் என் கவனம் சிதறும் வரை ஒலி அளவை அதிகரித்துக் கொண்டே செல்கிறாய் கோபங்கள் குறைந்து காதலில் திளைக்கும் நாளில் நம் ஊடலின் வடுக்களை தாமே தடவிக்கொள்ளும் அந்த பாத்திரங்கள் பாவம் தானே சகி.... #இதயத்திற்குஇறகின்கனம்-80