@rif.media.net: #BreakingNews #TamilNews #SriLanka #TrendingNews #FYP அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றத்திற்கு முடிவுக்கட்டும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான் இடையே “அமைதி ஒப்பந்தம்” கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் முக்கிய முன்னேற்றமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட அம்சங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் குறித்து விவாதிக்க இரு தரப்பினரின் பேச்சுவார்த்தைக் குழுக்கள் வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த முன்னேற்றம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான புதிய அத்தியாயமாக அமையக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.