@murugan.adiyen: சில கதவுகளை நாம்தான் மூடுகிறோம் சில கதவுகள் பிறரால் மூடப்படுகிறது வேறுபாடு சிறியதுதான் முதல் வகை கதவுகளின் முன் நின்றால் வருத்தம் இருக்கும் இரண்டாவது வகை கதவுகளின் முன் நின்றால் வலி இருக்கும் காலம் ஒரு விசித்திரமான தச்சன் அது மூடப்பட்ட கதவுகளைப் பற்றி விளக்கம் தருவதில்லை மாறாக நாம் கவனிக்காத இடங்களில் புதிய கதவுகளை திறந்துவைக்கின்னன சில திறவா கதவுகள் இன்று சிதிலமடைந்திருந்தாலும் அதன்முன் சற்று நின்று பார்க்கிறேன் குறைந்தபட்சம் திரும்பியாவது பார்த்துவிடுகிறேன் திறக்குமா என்பதற்காக அல்ல ஒரு காலத்தில் அது திறக்கும் என்று நம்பியிருந்த என்னை நானே ஒருமுறை பார்க்கத்தான்..!