@abduasli4: இஸ்லாமிய முதல் மாதமான முஹர்ரம் பிறை 9,10 ஆகிய இரண்டு நாட்கள் முறையே தாஸுஆ ,ஆஷூரா நோன்புகள் நோற்கவேண்டும். *அரபியில் 9 கு திஸ்ஆ تسعة என்பதால் பிறை 9 இல் நோற்கும் நோன்புக்கு தாஸுஆ تاسوعاء என்று சொல்லப்படுகிறது. *அரபியில் 10 கு அஷரா عشرة என்பதால் பிறை 10இல் நோற்கும் நோன்புக்கு ஆஷூராعاشوراء என்று சொல்லப்படுகிறது. சிலர் பிறை 9 இல் பிடிக்கும் தாஸுஆ நோன்புக்கு பதிலாக பிறை 11 இலும் நோன்பு நோற்கலாம் என்று கூறுகின்றனர்.இது முற்றிலும் தவறாகும். *இந்த நோன்பு நோற்பதால் முந்தைய ஒரு வருடத்தில் செய்த பாவங்கள் மன்னிக்கப் படுகிறது *இந்த தினத்தில் நோன்பு நோற்பதற்கான காரணம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் சமூகத்தினரையும் ஃபிர்அவ்ன் மற்றும் அவன் கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றி ஃபிர்அவ்ன் கூட்டத்தினரை கடலில் மூழ்கடித்து அழித்தது முஹர்ரம் பிறை 10 ஆம் நாளிலேயே ஆகும். மூஸா நபி அவர்களையும்,அவர்களது கூட்டத்தினரையும் அல்லாஹ் காப்பாற்றியதற்கு நன்றி செலுத்துவதற்காகவே இந்த நோன்பு நோற்கப்படுகிறது. *இந்த 10 ம் தினத்தில் யூதர்களும் நோன்பு நோற்பதால் அவர்களில் இருந்து மாறுபடுவதற்காகவே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வெல்லம் அவர்கள் 10 ஆம் தினம் மாத்திரமன்றி 9 ம் தினத்திலும் சேர்த்து இரண்டு நோன்புகள் நோற்குமாறு இஸ்லாமியருக்கு கட்டளையிட்டுள்ளார்கள்#creatorsearchinsights #senegalvsfrance