@wwwmadhan.com: முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் தருகிறது. அப்படிப்பட்ட படைப்பாளியின் கைகளைத் தொட்டு வணங்கலாம். இன்னும் சொல்லப்படாத தனித்துப் போராடும் பெண்களின் கதைகள் ஏராளம். சினிமாவால் முடிந்த அளவுக்கு இதைச் சொல்லியிருக்கிறது. ஏழுமலையாக விஜய் ஆண்டனி மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். "அப்பா, எங்களுக்கெல்லாம் நீங்கதான் இப்ப சாமி" என்று மகன் சொன்னபோது, "பாத்துக்கலாம் பா" என்ற ஒரே வார்த்தையில் கைதட்டல் பெறுகிறார். உண்மையான ஹீரோயிசம் சண்டையிடுவதல்ல; சக மனிதர்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதுதான் என்பதை அந்தக் கதாபாத்திரம் அமைதியாக உணர்த்துகிறது. செல்வியாக நடித்த ஸ்வாதிகா நம் வீட்டுப் பெண்ணாகவே மனதில் பதிகிறார். இரண்டு மகன்களாக நடித்த குழந்தைகளும் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் கண்கலங்க வைத்த இந்தத் திரைக்காவியத்தை இவ்வளவு எளிமையாக நமக்குக் கொடுத்த இயக்குநர் சசி அவர்களுக்கும், தயாரித்த விஜய் ஆண்டனி குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றியும் பேரன்பும். இந்தப் படம் திரையரங்குகளில் இன்னும் ஓட வேண்டும்; நம் சமூகத்தின் சாஸ்திரக் கட்டுகள் உடையும் வரைக்கும். — பா. மகாலட்சுமி