@vacbird.lifehack: Now it's on sale with a 68% discount.#travel #giftformom #cleaning #summerwins #dealsforyoudays

vacbird.lifehack
vacbird.lifehack
Open In TikTok:
Region: US
Friday 03 July 2026 11:34:31 GMT
1225
2
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @vacbird.lifehack, please go to the Tikwm homepage.

Other Videos


"கைதிகள் ஏற்படுத்தவிருந்த பேரழிவை தடுக்கவே அதிகாரி சிறைச்சாலை கதவின் துளையூடாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்." "சிறைச்சாலைகளில் இரண்டு பிரதான கதவுகள் காணப்படுகின்றன. முதலாவதாக இருப்பது இரும்புக் கதவு, அடுத்ததாக இருப்பது மரப்பலகையிலான கதவு ஆகும். இந்த கைதிகள் இரும்புக் கதவையும் உடைத்துக் கொண்டு, மரப்பலகை கதவை நோக்கி வந்துள்ளனர். இந்த இரும்பு கதவுக்கும் மரப்பலகை கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் பார்சல் ஸ்கேன் இயந்திரம் (Parcel scan machine), பாடி ஸ்கேன் இயந்திரம் (Body scan machine) மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க் உள்ளிட்ட பெறுமதிமிக்க பல உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. எனவே, இந்த கைதிகள் இரும்பு கதவையும் உடைத்துக் கொண்டு, இந்த மரக் கதவையும் கடந்து வெளியே வந்திருந்தால், அங்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவுகளைப் பற்றி என்னால் இந்த சந்தர்ப்பத்தில் மதிப்பிட முடியாது. அவர்கள் மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால், அனைவரும் தப்பியிருப்பார்கள், அனைவரும் சமூகத்திற்குள் வந்திருப்பார்கள். அப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை பற்றி என்னால் கூற முடியாது. சிறைச்சாலை அதிகாரிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவ்வாறு செயல்பட்டிருக்காவிட்டால், இது இதைவிட ஒரு பாரிய விபரீதமாக அல்லது பேரழிவாக மாறியிருக்கும். எமது சிறைச்சாலை அதிகாரி ஒருவர் அந்த மரக் கதவில் உள்ள சிறிய துவாரத்தின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அது நடக்கும் போது, நான் முன்னரே விளக்கியது போல அந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்து முடிந்த ஒரு தருணமாகவே இருந்தது. அதாவது இரும்புக் கதவையும் உடைத்துக் கொண்டு, மரக் கதவுக்கு அருகில் வந்திருந்தனர். அந்த வேளையிலும் எமது சிறைச்சாலை அதிகாரிகள் பெருமளவிலானோர் உள்ளே இருந்த கைதிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்தனர். அவர்கள் கைதிகளால் தாக்கப்பட்டு வந்தனர். எமது அதிகாரிகள் அந்த வளாகத்திற்குள் நுழைந்தது, கைதிகளின் மத்தியில் இருந்த மோதலைக் கட்டுப்படுத்தி, எமது அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காகவே ஆகும். ஆனால், அந்த அதிகாரிகளும் உள்ளே சிக்கிக்கொண்டனர். அந்தத் தருணத்தில்தான் கைதிகள் இரும்புக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்திருந்தனர். சமூக ஊடகங்களில் பரவிய அந்த காணொளிகள் உண்மையில் அந்த நேரத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த அதிகாரி மரக் கதவின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தையே காட்டுகின்றன." - பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார

About