@nithiya_n: #இசைக்குயில் #ஓய்ந்தது! இந்தியத் திரையிசையுலகின் இசைக்குயில் இன்று (11.07.2026) தனது குரலோசையை நிறுத்திக்கொண்டது. இந்திய உலக மொழிகளில் குறிப்பாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி, ஒடிஷா, பெங்காலி, உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 50,000 வரையான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.ஜானகி அம்மா. சிங்களப் பாடல்களையும் பாடியிருக்கிறார். திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவர். இவருக்கு நான்கு முறை தேசிய விருது கிடைத்துள்ளது. 1957 ஆம் ஆண்டில் 'விதியின் விளையாட்டு' என்ற தமிழ்த் திரைப்படத்துடன் இவரது திரையிசைப் பயணம் ஆரம்பித்தது. டி.சலபதி ராவ் இசையமைத்த இந்தத் திரைப்படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ' என்ற பாடலைப் பாடியிருந்தார். ஆனால், படத்தின் தலைப்புக்கேற்ப விதியின் விளையாட்டு; திரைப்படம் வெளியாகவில்லை. 1962ம் ஆண்டில் வெளிவந்த 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைப்பில் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய பாடல், காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையுடன் எஸ்.ஜானகி அவர்கள் பாடி முத்திரை பதித்த பாடல் 'சிங்காரவேலனே தேவா'. இன்றும் 'சுப்பர் சிங்கர்' - சரிகமப' இளம்போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துப் பாடும் பாடலாக விளங்குகிறது. இளம் பாடகிகள் அந்தப் பாடலைப் பாடி நேரடியாகவே எஸ்.ஜானகி அவர்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளார்கள். எஸ்.ஜானகி அம்மாவின் புகழை இசையுலகில் ஆயிரமாயிரம் பாடல்கள் நிலைபெறச்செய்யும். அவற்றில் 'சிங்காரவேலனே தேவா' மிக உயர்வாக இடம்பிடித்திருக்கும். தென்னிந்தியாவின் 'இசைக்குயில்' (Nightingale of South India) என்று மகுடம் சூட்டப்பட்டவர் எஸ்.ஜானகி அம்மா. தனது இனிமைக் குரலால் கோடிக்கணக்கான இதயங்களில் குடிகொண்டுள்ள 'இசைக்குயில்' #எஸ்.ஜானகி அம்மா, இனி நினைவுகளில் வாழ்வார்..
꧁𝖭𝗶𝗍𝘩𝗂𝗒𝖺࿐꧂
Region: GB
Saturday 11 July 2026 18:45:10 GMT
Music
Download
Comments
🇲🇫David Mukunthan🇲🇫🇲🇫 :
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
2026-07-11 20:53:35
1
To see more videos from user @nithiya_n, please go to the Tikwm
homepage.