💞ஒரு நாட்டை சொன்னாலே பயம் பணிவு
தேடல் வராத உலகில்
ஒற்றைப் பெயரை சொன்னவுடன்
எல்லாம் வருவது என்றால் அது வேலுப்பிள்ளை பார்வதி மகன் பெயர் மட்டுமே💞
💞இல்லை என தெரிந்த பின்னும்
இருக்கிறார் என எதிரிகள் நடுங்குவது
இவருக்கு மட்டுமே💞
💞பிள்ளையை தொலைத்த தாயைப் போல்
எங்காவது இவன் இருந்து வருவான் என
ஏங்குவதும் உலகம் இவருக்கு மட்டுமே💞
💞தத்துவங்கள் வரலாறுகள் புத்தகங்கள்
போதித்து திருந்ததாத மனதையும்
இந்த ஒற்றை பெயரின் உச்சரிப்பு திருத்திவிடுகிறது💞
💞மகான்கள் ஞானிகள் துறவிகள் என்ற
தெய்வீகத்தை விட அதீத சக்தி வாய்ந்த
ஏதோ ஓர் அதிசயத்தின் அபூர்வமே இவர்💞
💞ஒழுக்கம் என்பதை எப்படியாயினும் மீற வைத்துவிடும் போராட்ட களம்
ஆனால்
களத்தைக் கூட திருத்தலமாக பேணியது
உலகில் இவர் மட்டுமே💞
💞பண்டிகைகள் திருவிழாக்கள் வருகிறபோது
பெற முடியாத சந்தோசத்தை இந்த பெயரை
உச்சரிக்கும் ஒவ்வொரு தமிழன் மட்டுமல்ல
ஒடுக்கப்பட்ட அனைவருமே உணர்கிறார்கள்💞
💞சாதனையாளர்களுக்கு வழிகாட்டியாய்
தோற்றவர்களுக்கு நாட்காட்டியாய்
எதிர்கால புரட்சிக்கு முன்னோடியாய்
நிகழ்கால துன்பங்களுக்கு நம்பிக்கையாய்
நேற்றும் இன்றும் என்றும் நீயேயிருப்பாய்💞
💞உன் பெயர் ஒன்றே--- தமிழனின்
இருள் அகற்றும் நெருப்பாய்💞
💞முள்ளிவாய்காலோடு மூச்சு நின்றதென உலகம் உரைக்கிறது
காற்று எப்படி காலமாகும் என்பதால்
காலமே உம்மை அழைக்கிறது💞
💞இறைவன் இருக்கின்றான்
இயற்கையே சொல்கிறது
இறவா வரம் பெற்ற நீங்கள் இருப்பீர்கள்
இறையே அதை சொல்லி செல்கிறது💞
இறவா வரம்
பிரபாகரம் வாழீயவே.....🦅