@akdour.king: சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) நடத்தப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் உறவு மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை மதிப்பீட்டில் (Investor Relations and Debt Transparency Assessment) உலகளவில் அதிவேகமாக முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இலங்கை உருவெடுத்துள்ளது. இலங்கையின் முதலீட்டாளர் உறவுக்கான புள்ளிகள் 6.3 புள்ளிகளால் அதிகரித்து, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுடன் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. நிதி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் முதலீட்டாளர் உறவுத் திட்டம் (Investor Relations Program) ஊடாக சர்வதேச முதலீட்டாளர்களுடனான தொடர்பு வலுப்படுத்தப்பட்டமையே இந்த முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். மேலும், கடன் வெளிப்படைத்தன்மை பிரிவில் 13 புள்ளிகளுக்கு 11.25 புள்ளிகளையும், ESG தரவு மற்றும் கொள்கை பகிர்வில் 4 புள்ளிகளுக்கு 3.25 புள்ளிகளையும் பெற்று இலங்கை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிதி மற்றும் கடன் தொடர்பான தகவல்களைத் துல்லியமாகவும் உடனுக்குடனும் வெளியிடுவதன் மூலம், உலகளாவிய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இலங்கை வெற்றிகரமாகப் பெற்று வருகிறது.