@kaanagam26: 1993 February. BBC : யாழ்ப்பாணத்திலிருந்து ஏன் முஸ்லிம் மக்களை வெளியேற்றினீர்கள்?அவர்களும் யாழ்ப்பாண மக்கள்தானே? தேசியத் தலைவர் : 1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக்கலவரம் வெடித்து பெரும் தொகையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம்.ஆயினும் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம். 🟥 சொன்னபடியே 2002 புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் முஸ்லிம் தலைவர்களுடன் எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் படி மீளக் குடியமர்த்தினார்கள். ஒரு இனக் குழுமத்தின் உயிரைப் பாதுகாத்து ஒப்பந்தத்தின் பின் அவர்களை மீளக் குடியேற்றுவது இனச் சுத்திகரிப்பா? அல்லது இன்று வரை தென் தமிழீழத்தில் பறி போன தமிழர் நிலங்கள் முழு முஸ்லிம் கிராமங்களாகவே மாறிப் போனது இனச் சுத்திகரிப்பா? தோண்டக் கூடாது என்று நாம் விரும்புகிற ஒரு பிரச்சினையை முஸ்லிம்கள் தோண்டாமல் இருப்பதும் பொது எதிரி சிங்களம் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்வதும் இரு தரப்பிற்கும் நன்மை பயக்கும். -பரணி கிருஷ்ண ரஜனி