@malaysiaseithi: SJKT அருமுகம் பிள்ளை மாணவர்கள் தேசிய அளவில் சாதனை! சுங்கை பட்டாணி, கெடா: 2026ஆம் ஆண்டுக்கான “Who Wants to Be a Scientist?” தேசிய அறிவியல் போட்டியில் SJKT அருமுகம் பிள்ளையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர். இப்போட்டி கடந்த ஜூலை 25ஆம் தேதி பாங்கியில் உள்ள மலாயா தேசியப் பல்கலைக்கழகத்தில் (UKM) நடைபெற்றது. இதில் அக்ஷயா மகாதேவன் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், தாமிலினியா தாமில்மணி மற்றும் பிரணவ் தினகரன் ஆகியோர் தேசிய அளவிலான அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். மாணவர்களின் இந்தச் சாதனை அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, அறிவியல் மீதான ஆர்வம் மற்றும் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் SJKT அருமுகம் பிள்ளை, சுங்கை பட்டாணி, கெடா பள்ளிக்கு தேசிய அளவில் பெருமை கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு வழிகாட்டிய தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் அறிவியல் சாதனையாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
Malaysia seithi tamil
Region: MY
Sunday 09 August 2026 13:14:21 GMT
Music
Download
Comments
krishnan kathravelu :
valthukal 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
2026-08-10 12:42:15
0
To see more videos from user @malaysiaseithi, please go to the Tikwm
homepage.