அன்பே சிவம் :
கொழும்பில் ஒரு ஆட்டிறைச்சி பிரியாணி ரூ. 2,000. மட்டக்களப்பு ஹாஜியார் ஹோட்டலில் ரூ. 2,500. கல்முனை மாப்பிள்ளை விருந்தில் ஒரு பாகுபலி தாளி ரூ. 12,000.
அப்படியிருக்க, ரூ. 3,000 உணவுக்கு அதிகம் என்று நினைத்தவர்கள் ஏன் Reecha உணவுத் திருவிழாவுக்குச் சென்றார்கள்? அங்கு கிடைக்கப்போகும் உணவின் மதிப்பு தாங்கள் செலுத்தும் பணத்தைவிட அதிகம் என்று நம்பியதால்தானே?
நிகழ்வு ஏற்பாட்டில் தவறு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக அவர் மூன்று முறை மன்னிப்புக் கேட்டுள்ளார். அடுத்த நிகழ்வுகளையும் இரத்து செய்துள்ளார். உணவு கிடைக்கவில்லை என்று உண்மையாகக் கூறுபவர்களுக்கு, எந்த ஆதாரமும் கேட்காமல் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதைவிட ஒரு ஏற்பாட்டாளர் வேறு என்ன செய்ய வேண்டும்?
ஆனால் இதைவிட பெரிய அரசியல் முரண்பாடுகள், பொய்யான வாக்குறுதிகள், பண வசூல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை நாம் கேள்வி கேட்காமல் விட்டுவிட்டு, ஒரு உணவுத் திருவிழாவில் ஏற்பட்ட நிர்வாகத் தவறை மட்டும் அரசியல் ஆயுதமாக்குவது வேடிக்கையாக இருக்கிறது.
Reecha-வில் விளையும் பழங்களில் formalin இருப்பதாக ஆதாரமின்றி நாடாளுமன்றத்தில் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அந்தப் பழங்களை தங்கள் குழந்தைகளுக்குக்கூட வாங்கிக் கொடுக்கலாம் என்று பாஸ்கரன் கூறுகிறார். உண்மையிலேயே அவை ஆபத்தானவை என்றால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வாரா?
பணத்தாசை மட்டுமே நோக்கம் என்றால், 300–400 ஏக்கர் தரிசு நிலங்களை வளமான நிலங்களாக மாற்றி, மரங்களையும் இயற்கையையும் வளர்ப்பதில் இவ்வளவு முதலீடு செய்வாரா?
அவருடைய அரசியல் நோக்கம் என்ன என்பது எதிர்காலத்தில் தெரியும். பதவிக்காகவோ, ஒரு பெயரை விட்டுச் செல்லவோ அவர் அரசியலுக்கு வரலாம். அதில் தவறு இல்லை.
என்னைப் பொறுத்தவரை, சில அரசியல் சுத்துமாத்துகளையும், வெறும் அரசியல் நாடகங்களையும் விட, வடக்கிற்கு பாஸ்கரன் ஒரு நல்ல தெரிவாக இருக்கக்கூடும்.
முடிவெடுப்பது மக்களின் கையில்.
2026-08-09 20:15:49