@5ithampadai5: ஏ. சி. தாசீசியஸ் (தாழையடி, இலங்கை) ஈழத்து நவீன நாடக முன்னோடி. இவர் சிறுவயதில் இருந்தே நாடகக் கலையில் ஈடுபாடு கொண்டவர். தற்பொழுது இங்கிலாந்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்திலும், அக்குவினாஸ் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பின்னர் லயனல் வென்ற் நாடக அரங்கிலும் உயர் கல்வியும் நாடகத்துறையில் பயிற்சியும் பெற்றார். ஆரம்பத்தில் ஆங்கில நாடகத்தின் மேற்கத்திய நுட்பங்களைப் பயின்ற இவர், தமிழ் நாடகங்களுக்குத் திரும்பி, ஈழத்தில் கிராமம் கிராமமாக அலைந்து அங்கு உள்ளோடி இருந்த மரபுகளையும் உள்வாங்கி புதிய நாடக மரபை உருவாக்கினார். இவரது பிச்சை வேண்டாம் பொறுத்தது போதும், கோடை, புதியதொரு வீடு, எந்தையும் தாயும், ஸ்ரீசலாமி போன்ற நாடகங்கள் புகழ் பெற்றன. இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். லண்டனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பிபிசி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போதும் தொடர்ந்து நாடகத்தில் ஈடுபட்டார். இவருடைய ஸ்ரீசலாமி நாடகம் ஆங்கில, ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒரு சேர அமைந்த ஒன்று. அது சுவிஸ் நாட்டில் 36 தடவை அரங்கேறி உள்ளது. ஐரோப்பா, கனடா, தமிழ் நாடு ஆகிய நாடுகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளார். ஸ்விற்சலாந்து அரசு தனது 700 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது அதன் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் அவரைத் தெரிவு செய்தது. இவர் 1997இலிருந்து சில ஆண்டுகள் இலண்டன் ஐபிசி அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராகவும் பணி புரிந்தார்.

ஐந்தாம் படை
ஐந்தாம் படை
Open In TikTok:
Region: FR
Monday 10 August 2026 21:09:06 GMT
558
9
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @5ithampadai5, please go to the Tikwm homepage.

Other Videos


About