@mrtamilsir: தரம் 12 தமிழ் மொழியும் இலக்கியமும் -பாடல் 01 தலைவி கூற்று குறுந்தொகை - 126 "இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்.. " இளமையின் அருமையை எண்ணிப் பார்க்காமல், பொருள்மீது ஆசைப்பட்டுத் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றார். அவர் இன்னும் இங்கு வரவில்லை. மழையினால் நன்கு வளர்ந்த முல்லைக் கொடியின் வரிசையாகத் தொகுக்கப்பட்ட அரும்புகளைத் தன் ஓளியுடன் விளங்கும் பற்களாகக் கொண்டு, நறுமணம் மிக்க குளிர்ந்த கார்காலம், “அவர் எங்கு இருக்கிறாரோ?” என்று கேட்டு என்னைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. #tamil #pravinsan #ALtamil #tamil #grade12