@manavannews: கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் முடிவுக்கு வந்தது – 9 பெண் சுகாதார உதவியாளர்களுக்கு இடமாற்றம் அம்பாறை – கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பாக ஏற்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 06ஆம் திகதி கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக 37 மூவின சுகாதார உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 9 பேர் இஸ்லாமிய பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதார அமைச்சு இன்று தீர்க்கமான முடிவை அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த 9 இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்களையும் அருகிலுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நாளை கல்முனை ஆதார வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் சீருடை தொடர்பாக நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வருவதாகவும் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். #Kalmunai #Ampara #HealthService #SriLanka #ManavanNews