@rif.media.net: மத்திய ஆபிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 100-க்கும் மேற்பட்டோர் பலி! மத்திய ஆபிரிக்கக் குடியரசின் மேற்கு பகுதியில், கமரூன் எல்லைக்கு அருகிலுள்ள Zamboye கிராமத்தில் அமைந்திருந்த கைவினைத் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில், சுரங்கத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்ததாகவும், மீட்புப் பணியாளர்கள் இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதுடன், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ள சிறிய அளவிலான கைவினைச் சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. #BreakingNews #TamilNews #SriLanka #TrendingNews #fyp