@khisa1989: #creatorsearchinsights #emotionally #ஆசிரியர் அறைந்ததில் 6 வயது சிறுவன் பரிதாபப் ப"லி..! "கல்வி பிஞ்சுகளின் உயிரைப் பறிக்கும் ஆயுதமாக மாறக்கூடாது!" 🚨💔 இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றில், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியர் அறைந்ததில் 6 வயது சிறுவன் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் பாடப்பிரிவு நடந்து கொண்டிருந்தபோது, குறித்த சிறுவன் வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆத்திரமடைந்த ஆசிரியர், சிறுவனின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சிறுவன், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கல்வி என்பது அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்ட வேண்டுமே தவிர, பிஞ்சு குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் ஆயுதமாக மாறக்கூடாது. கண்டிப்பு என்ற பெயரில் வகுப்பறைகளில் காட்டப்படும் இத்தகைய கொடூர வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். புத்தகப் பையின் பாரத்தை விடக் குழந்தைகளின் உயிர் மதிப்பானது என்பதை ஆசிரியர்களும் சமூகமும் உணர்வதோடு, இச்சம்பவத்திற்குப் காரணமான நபருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். #Visakhapatnam #SchoolIncident