@mohamedaasik75: 👮♂️ 10 வருடங்களுக்கு பிறகு மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு முஸ்லிம் பொறுப்பதிகாரி! திருகோணமலை – மூதூர் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக (OIC), பிரதம பொலிஸ் பரிசோதகர் A.F.M. றமீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மூதூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நியமனம் தொடர்பில் மூதூர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிய பொறுப்பதிகாரியாக தனது கடமைகளை சிறப்பாக முன்னெடுத்து, மக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தி, அனைத்து சமூக மக்களுடனும் நல்லிணக்கத்துடன் பணியாற்ற வாழ்த்துகள். A.F.M. றமீஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👮♂️🇱🇰👏 Congratulations! 🎉 #மூதூர் #Muttur #Trincomalee #திருகோணமலை #Police