@khisa1989: #creatorsearchinsights #இலங்கை கடற்பரப்பில் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்து அகழ்ந்தெடுப்பதற்கான புதிய உரிமங்களை வழங்கும் வேலைத்திட்டம் இன்று (25) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை கனிம எண்ணெய் அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. மேற்கு கடற்பரப்பு மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் வணிக ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய இயற்கை எரிவாயு படிமங்கள் இருப்பது ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மன்னார் வளைகுடாவில் உள்ள நான்கு முக்கிய மண்டலங்களில் (Blocks) ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக சர்வதேச ஆற்றல் நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. முன்னதாக நிலவிய சட்டப் பிரச்சினைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்த செயல்முறை தாமதமடைந்திருந்த நிலையில், தற்போது அந்த தடைகள் நீக்கப்பட்டு சர்வதேச ஏலங்கள் திறக்கப்பட்டுள்ளன. நாட்டின் சக்தி வளப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், எரிபொருள் இறக்குமதிச் சுமையைக் குறைத்து பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இந்த பிரம்மாண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டம் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #OilAndGasSriLanka #MannarBasin #SriLankaEnergy