@prathapdias05: மூன்று மாதங்களாய்… ஒரு வீட்டின் மௌனம் பேசிக்கொண்டிருக்கிறது… அப்பா… காலம் மூன்று பௌர்ணமிகளைத் தாண்டிவிட்டது, மூன்று முறை நிலா வந்து சென்றுவிட்டது, ஆனால் நீங்கள் சென்ற நாளில் வாசலில் விழுந்த அந்த நிழல் இன்றுவரை எழுந்து செல்லவில்லை, நீங்கள் அமர்ந்திருந்த நாற்காலி இன்னும் உங்களுக்காகக் காத்திருக்கிறது, நீங்கள் தொட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் உங்கள் விரல்களின் வெப்பத்தைத் தேடுகின்றன, ஒரு மனிதன் இல்லாமல் போனால் ஒரு வீடு மட்டும் வெறுமையாகாது, அவனைச் சுற்றி வாழ்ந்த பல இதயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுமையாகிவிடுகின்றன. Miss you maama 😔