@muja332: *_"உன் சிரிப்பில் இருக்கும் வலியையும்... உன் கோபத்தில் இருக்கும் நியாயத்தையும்.... புரிந்து கொள்ளாதவர்களால்.... உன்னை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது...."_* *1. சிரிப்பு முகமூடி* சில நேரம் நாம ரொம்ப சிரிக்கிறோம்னா, உள்ளுக்குள்ள ஆயிரம் காயம் இருக்கலாம். "நான் நல்லா இருக்கேன்" னு மத்தவங்கள கவலைப்பட வைக்காம இருக்க போடுற முகமூடி அது. அந்த வலிய புரிஞ்சுக்காம, "இவன் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கான்" னு சொல்றவங்களால நம்மள எப்படி புரிஞ்சுக்க முடியும்? *2. கோபத்துக்கு பின்னாடி காரணம் இருக்கும்* நாம கோவப்படுறோம்னா சும்மா இல்ல. நியாயம் மிதிக்கப்படும்போது, அன்பு அலட்சியப்படுத்தப்படும்போது வர்ற வெடிப்பு அது. அந்த நியாயத்த பாக்காம "இவன் கோவக்காரன்" னு முத்திரை குத்துறவங்க நம்மள புரிஞ்சுக்கவே மாட்டாங்க. *3. புரிதல் ரொம்ப அபூர்வம்* எல்லார்கிட்டயும் நம்மள விளக்கி சொல்ல தேவையில்ல. உன் அமைதியையும், உன் கண்ணீரையும், உன் கோபத்தையும் படிக்க தெரிஞ்ச ஒருத்தர் இருந்தா போதும். அவர்தான் உண்மையானவர். கடைசியா... புரியாதவங்களுக்காக நம்மள மாத்திக்க வேண்டாம்... 👍👍👍 புரிஞ்சுக்கிறவங்களுக்காக வாழ்ந்தா போதும்....♥️♥️♥️ ....Muja... ⚡🌿😊😊🌿⚡ #creatorsearchinsight #srilankan_tik_tok🇱🇰 #tiktokviral #fypシ #fyppppppppppppppppppppppp