@s.suganthan25: கூடுவாஞ்சேரியில் பெண் கொலை உடல் பாகங்களை பிரியாணி சமைத்த விவகாரம் கொலையாளி மாணிக் லஸ்கர் அவரது மனைவி பகாமதி மாஜி இருவரையும் மணிப்பூரில் வைத்து கூடுவாஞ்சேரி தடைப்படை போலீசார் கைது செய்த நிலையில் விமான மூலம் சென்னை அழைத்து வந்தனர் சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பப்பட்டதுடன் வீட்டில் இருந்த உடல் பாகங்களை பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மைதா மாவுடன் கலந்து சமைத்து வைத்திருந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான மணிக் லஸ்கர் (22) அவரது மனைவி பகாமதி மாஜி(20) மணிப்பூர் மாநிலத்தில் கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டனர். ஆக்ரா ரயில் நிலையத்திற்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது அதில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஒரு சூட்கேஸை ரயில்வே போலீஸார் சோதனையிட்டனர். அதில் பெண் ஒருவரின் உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது.