@sarafathjaman99: நேபாள சோ'கம் | ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கை வம்சாவளி 🥹💔 குடும்பத்தினர் நான்குபேரும் மாயம்! நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட ப'யங்கரமான தி'டீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சி'க்கி, ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் மா'யமா'கியுள்ளது. இமயமலைப் பகுதியில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரால் நூற்றுக்கணக்கான மக்கள் உ'யிரி'ழந்துள்ள நிலையில், மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கா'ணாமல் போயுள்ளனர். அவர்களுள் புனிதப் பயணம் மேற்கொண்ட 43 ஆஸ்திரேலியர்களும் அடங்குவர். காணாமல் போனவர்களில் சிட்னியைச் சேர்ந்த இலங்கை வம்சாவளி தமிழ் குடும்பமும் ஒன்றாகும். சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா (42), மகன்கள் அஷ்வின் (14) மற்றும் ஆருஷ் (11) ஆகியோரே வெ'ள்ளத்தில் சி'க்கியவர்கள் ஆவர். அவர்கள் ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ் (Himalayan Glacier Adventures) குழுவுடன் திபெத்தில் உள்ள புனிதத் தலமான கைலாச மலைக்குச் யாத்திரை சென்றிருந்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. நேபாள-திபெத் எல்லையில் உள்ள குடிவரவு சோதனைச் சாவடியைக் கடக்கத் தயாரான அன்று காலையுணவுக்குப் பிறகு, இவர்களுடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டதாக ஷைலஜாவின் தங்கை வைஷ்ணவி தெரிவித்துள்ளார். அக்குடும்பத்தினர் பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் சென்றிருக்கலாம் என்ற நம்பிக்கையில் உறவினர்கள் காத்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அரசாங்கம் மீட்புக் குழுவினரையும் அவசர உதவிகளையும் நேபாளத்திற்கு அனுப்பி தேடுதல் பணிகளைத் தீவி'ரப்படுத்தியுள்ளது.