@achuaqsha12180925: குவைத்தில் ஈரான் தாக்குதலில் குடியிருப்பு தீப்பிடித்து சேதமடைந்துள்ளது குவைத் பொது தீயணைப்புப் படையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், பிரிகேடியர் ஜெனரல் முகமது பதர் இப்ராஹிம் அவர்கள் இன்று(02/09/26) சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரான் ஆளில்லா விமானம் மூலம் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகரின் மத்திய பகுதிகளில் உள்ள ஒரு குடியிருப்பில் அதிகாலையில் ஏற்பட்ட தீயை, அல்-ஹெலாலி மற்றும் அல்-மதீனா மையங்களைச் சேர்ந்த தீயணைப்புப்படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கட்டுப்படுத்தியதாக அறிவித்தார். பிரிகேடியர் ஜெனரல் முகமது இப்ராஹிம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் உடனடியாக தீயை அணைக்கும் பணியைத் தொடங்கியதாகவும், அங்கு தீயை அணைத்து கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கினார். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பொருள் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.