@kavithaiyum_avalum: தனியாக நடக்கக் கற்றுக்கொள் நண்பர்கள் இல்லாமல் காதலர்கள் இல்லாமல் உடன் பிறப்புக்கள் இல்லாமல் சொந்த பந்தங்களின் நிழல்கூட இல்லாமல் நீ தனியாக நடக்கக் கற்றுக்கொள் சில நேரங்களில் உன்னைத் தூக்கிவிட ஒரு கை இருக்காது உன் அழுகையைக் கேட்க ஒரு செவி இருக்காது உன் மன பாரத்தை இறக்கி வைக்க ஒரு தோள் இருக்காது அக்கணங்களில் உனக்கு நீதான் துணை இருக்க வேண்டும் உன்னை நீயேதான் தாங்கிக்கொள்ள வேண்டும் இன்னும் “நான் இருப்பேன்” என வாக்குத்தந்தவர்கள் எவரும் இறுதிவரை உன்னுடன் இருக்கப்போவதில்லை சிலர் விருப்பமில்லாமல் விலகலாம் சிலர் தூரங்களால் தொலைந்து போகலாம் சிலர் காலத்தின் ஓட்டத்தில் ஒரு நினைவாக கரைந்து மீளலாம் அதனாலென்ன அவர்கள் போகும்போது அவர்களோடு சேர்ந்து நீயும் தொலைய வேண்டுமா என்ன உண்மையில் தனிமை உன்னை உடைக்க வருவதில்லை அது நீ யார் என்பதை உனக்குக் கற்றுக்கொடுக்க வருகிறது பின்னும் யாருடைய கைதட்டலுமின்றி நிமிர்ந்து நிற்கவும் யாருடைய தோளுமின்றி அழுதுவிட்டு எழவும் யாருக்காகவும் வாழ்க்கையை நிறுத்தாமல் தொடர்ந்து நடக்கவும் தனிமைதான் உன்னைப் பயிற்றுவிக்கிறது தவிர நீ தனியாக நடந்தப் பாதைகள்தான் உன்னை நீயாக உருவாக்கியவை இல்லையா ஆக எப்போதும் தயாராக இரு தனியாக நடப்பதற்கு தனியாக அழுவதற்கு தனியாக எழுவதற்கு தனியாக மகிழ்வதற்கு சமயங்களில் தனியாக வாழ்வதற்கு✌️🔥☘️ .. .. #kaviaval #tamilkavithai #tamilmotivation #tamil #fyp