@kuwaittamilan4: குவைத்தில் இன்று அதிகாலையில் தலைநகர் குவைத் சிட்டியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ஈரான் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில், ஒரு குடியிருப்பு மற்றும் பல கார்கள் சேதமடைந்துள்ளன. தாக்குதலுக்கு உள்ளான அந்த குடியிருப்பு அப்போது ஆள் இல்லாமல் இருந்ததாகவும், இதனால் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கட்டிடத்தின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அல்-ஜரீதா செய்தி வெளியிட்டுள்ளது. குவைத்தில் தொடர்ந்து நிலவும் பாதுகாப்பு பதற்றத்துக்கு மத்தியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், பொதுமக்கள் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. (Source:Aljarida) #Kuwait #kuwaitnews #kuwaittamilan #KuwaitTamilNews