@thamizh36024: தேஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள நைல் நீர்யானைக் குட்டிக்கு பெயர் சூட்டும் போட்டி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விலங்குகளை நேசிப்பவர்கள் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை முன்மொழியும் வகையில் இந்த பொது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தப் பெயர் சூட்டும் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையப் படிவத்தில் பூர்த்தி செய்து, நீர்யானைக் குட்டிக்கு பொருத்தமான பெயரை முன்மொழியலாம். இந்த முயற்சியின் மூலம் விலங்கியல் பூங்காவுக்கும் விலங்குகளை நேசிக்கும் சமூகத்தினருக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும், பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெயர்களை முன்மொழிய விரும்புவோர் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையப் படிவத்தின் மூலம் தங்களது பரிந்துரைகளை அனுப்பலாம்: 🔗 https://forms.gle/TE1LVndMqtBMva1fA

தமிழ் 360
தமிழ் 360
Open In TikTok:
Region: LK
Thursday 03 September 2026 04:25:25 GMT
45
1
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @thamizh36024, please go to the Tikwm homepage.

Other Videos


About