@kuwaittamilan4: குவைத்தில் போ*தைப்பொருள் கடத்தல்: 4 பேர் கைது..! குவைத்தில் போ*தைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை இணைந்து நடத்திய நடவடிக்கையில், வெளிநாட்டிலிருந்து தரைவழியாக போ**தைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 300 கேப்டகான் மாத்திரைகள், 150 கிராம் கோகைன், 150 தாள்கள் போதைப்பொருள், 90 A4 தாள்கள் போதைப்பொருள் மற்றும் 10 கெமிக்கல் ஆம்ப்யூல்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு தனி வழக்கில், போதைப்பொருள் விற்பனை மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்ததாக கூறப்படும் 30 கிராம் கிரிஸ்டல் மெத் மற்றும் 10 கிராம் ஹஷீஷ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (Source:moi_kuw) #Kuwait #kuwaitnews #kuwaittamilan #KuwaitTamilNews