போர் மேகம் சூழ்ந்த போது அகிம்சையால்
குடை பிடித்தான்
நீர் கூட அருந்தாது விடுதலைக்கு உயிர் கொடுத்தான்t
தமிழர் தலை மீது குண்டுகள் விழாதிருக்க
அகிம்சையால் உரை தொடுத்தான்
தணியாத தலைமையின் இலக்கை --- அடி பணியாது உலகிற்கு எடுத்துரைத்தான்
பார்த்தீபம் எனும் ஊரெழு தீபம் ஒளிர்ந்தது
பார் போற்ற ஈழக் கதை வரைந்தது
ஊரெல்லாம் ஒன்றாகி அழுதது -- ஓர் நாள்
உலகே வேடிக்கை பார்க்க கண் மூடி அணைந்தது
விடுதலை என்பதன் பெரு நெருப்பை உயிர்
விறகால் மூட்டினான்
படுகொலைகள் பல தவிர்க்க அகிம்சைதனை
உலகறிய ஏற்றினான்
கடுகளவும் கண்டறியா பாரதத்தை
கண் திறக்க கூவினான்
போர் முழக்க கதவடைக்க புண்ணியன்
இரையாகினான்
மனித குல வரலாற்றில் மேன்மைமிகு புதல்வன்
தமிழ் ஈழ புயல் காற்றில் தென்றலான தமிழன்
இனம் காக்க தமிழ் மனம் பூக்க--- அணு அணுவாய் இறந்த முதல்வன்
இன்று வரை உலகை வியக்க வைத்து -- விடுதலைக்கு விளக்கு வைத்து ஒளிருகின்ற அகிம்சையின் தலைவன்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
நல்லூர் முற்றத்தை மறப்போமா
சித்தனை சிவனை மறந்தாலும்
வித்தகனே உனை மறந்து நடப்போமா
இத்தனை ஆண்டின் பின்னும் ஒளி முகமாய்
உனதுருவம்
இன்றைய நாளில் உலகெங்கும் ஊரெழுவின்
புகழ் நிலவும்🙏🙏
2026-09-05 20:17:00
1
To see more videos from user @tamilnkr, please go to the Tikwm
homepage.