@akdour.king: சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 7ஆவது மதிப்பாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக, அக் குழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். IMF தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான இந்த குழுவினர், இலங்கை அதிகாரிகளுடன் பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் நீண்டகால கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர். இந்த 7ஆவது மதிப்பாய்வு வெற்றியடைந்து நிறைவேற்றுச் சபையின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இலங்கைக்கு சுமார் 254 மில்லியன் சிறப்பு வரைபரிவர்த்தனை உரிமை (SDR) நிதித் தவணை கிடைக்கப்பெறும். தற்போதைய கால அட்டவணையின்படி, இலங்கைகளுக்கான இந்த IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டம் 2027ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே இலங்கைக்கு முழுமையான பொருளாதார சுதந்திரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.