@josephjusteenjunite: அகிம்சை வழியில் கூட உரிமையைக் கோரிய ஒரு தமிழனுக்கு விடிவு கிடைக்கவில்லை. கிடைத்தது என்ன? “பயங்கரவாதி” என்ற முத்திரை. தன் உயிரையே பொருட்படுத்தாமல், தமிழர்களின் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னையே அர்ப்பணித்த திலீபன் அண்ணாவின் தியாகத்தை நினைக்கும்போது மனம் கனக்கிறது. அவருடைய பசி தீர்ந்ததா? இல்லை. அவரது உயிர் பிரிந்தபோதும், அவர் எழுப்பிய உரிமைக்கான கேள்விகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அண்ணா திலீபனுக்கு வீர வணக்கம். உங்கள் தியாகம் எங்களுக்கு வெறும் வரலாற்றுச் சம்பவம் அல்ல; அது எங்கள் மனதில் என்றும் அழியாத வலி. அந்தக் காலத்தில் நடந்தவற்றை வேடிக்கை பார்த்தவர்களையும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட துயரங்களையும் மறந்துவிட முடியாது. எத்தனை தலைமுறைகள் கடந்தாலும், அந்த வலியை அனுபவித்தவர்களுக்கு அதன் ஆழம் தெரியும். இன்று தமிழர்களின் பெயரையும், தமிழ்நாட்டின் உணர்வுகளையும் வைத்து பலரும் தங்களுக்கான அரசியலையும் விளம்பரத்தையும் முன்னெடுக்கிறார்கள் என்ற ஏமாற்றம் பலரிடமும் உள்ளது. ஆனால், மக்களின் உண்மையான வலிக்கும், அவர்களின் எதிர்காலத்திற்குமான நிலையான தீர்வுக்கும் நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது? எங்கள் தலைமுறை சந்தித்த கஷ்டங்களை எங்களுக்குத்தான் தெரியும். அந்த அனுபவங்களை வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லவும் முடியாது; சொல்ல விருப்பமும் இல்லை. ஆனால் ஒரு உண்மை மட்டும் மறுக்க முடியாது — தியாகம் செய்தவர்களின் கனவுகள் வெறும் அரசியல் முழக்கங்களாக மாறிவிடக் கூடாது. தமிழர்களின் உரிமை, மரியாதை, பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து உண்மையான அக்கறையுடன் சிந்திப்பதும், அடுத்த தலைமுறைக்கு நல்ல பாதையை விட்டுச் செல்வதுமே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். இது யாரையும் குறை கூறுவதற்கான பதிவு அல்ல. என் மனதில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு பொதுவான கருத்து மட்டுமே. திலீபன் அண்ணாவின் தியாகத்தை நினைவுகூர்ந்து, வீர வணக்கம். நன்றி.
꧁༺✿𝒟𝒾𝓃𝒶✿༻꧂
Region: FR
Monday 07 September 2026 22:41:49 GMT
Music
Download
Comments
There are no more comments for this video.
To see more videos from user @josephjusteenjunite, please go to the Tikwm
homepage.