@daya.yoga0: என் வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த ஒரே ஒரு நல்ல பாடம்— யாரையும் முழுமையாக நம்பாதே. நம்பினால், ஒருநாள் அந்த நம்பிக்கையே உன் கையில் வைத்த கத்தியாய் மாறும். நடுரோட்டில் கைப்பிடித்து தோளோடு தோள் சேர்ந்து நடந்த தோழனாக இருந்தாலும் சரி… கட்டிய மனைவியாக இருந்தாலும் சரி… எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் சரி… ஒருநாள் அவர்கள் தங்களுடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்தித்தான் தீருவார்கள். அப்போது வலிப்பது அவர்கள் மாறியதற்காக மட்டும் அல்ல… அவர்களிடம் நாம் உண்மையாக இருந்ததை நினைத்துப் பார்க்கும்போதுதான். இது கற்பனையில் பிறந்த எழுத்தல்ல… யாரோ சொன்ன கதையுமல்ல… என் வாழ்க்கை என்னிடம் வாங்கிய வலியின் விலை; ஒவ்வொரு வரியிலும் என் அனுபவம் இரத்தமாக கசிகிறது..! By daya