@mnqblngt: Food was good! Place is lit, relaxing vibes . Somewhere in Angono Rizal #XtractCoffeeShop

mnqblngt
mnqblngt
Open In TikTok:
Region: PH
Tuesday 15 September 2026 05:57:00 GMT
1200
19
5
2

Music

Download

Comments

xtract_coffeestation
X T R A C T :
Thank you so much for spending your rest day with us! We hope you had a good time 🫶🏻☕️
2026-09-16 14:46:08
1
rxydensi
desims👾 :
miss danaka cher🥹😔
2026-09-15 09:13:32
2
theycallme_chricell
@xoxo_chricell🫶 :
miss you cherr🥹
2026-09-15 06:42:26
1
elah09807.1
elah_dump! :
sarap ma'am,na gutom tuloy ako,hehe😂😁
2026-09-15 06:12:00
1
To see more videos from user @mnqblngt, please go to the Tikwm homepage.

Other Videos

எருசலேமிலுள்ள கெத்சமனி எனும் இடத்தில் தேவமாதாவின் வெறுமையான கல்லறை உள்ளது. மாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு ஆரோபணமாவதற்கு முன்பு, அப்போஸ்தலர்கள் இந்தக் கல்லறையில் அவருடைய திருச்சரீரத்தை அடக்கம் செய்தார்கள். மூன்று நாட்களாக மாதாவின் திருவுடல் அங்கே இருந்தது. இந்தக் கல்லறையில் மாதாவின் அற்புதமான ஒரு படம் இருக்கிறது. கி.பி. 1870ஆம் ஆண்டு, ஒரு அருட்சகோதரி உறங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார். அதில் ஒரு பெண் அவரிடம் வந்து, தனது படத்தை வரையும்படி கேட்டார். அருட்சகோதரியோ, தன்னிடம் படம் வரையப் பலகை எதுவும் இல்லை என்றார். அப்போது அந்தப் பெண் அருட்சகோதரியிடம் ஒரு பலகையைக் கொடுத்து, அதில் தன்னுடைய படத்தை வரையும்படி கூறினார். அருட்சகோதரியும் அந்தப் பெண்ணை வரையத் தொடங்கினார். இதன்போது, அந்தப் பெண்ணின் ஆடை பொன்னிறமாக மாறுவதையும், முகத்திலிருந்து பிரகாசமான ஒளி வீசுவதையும் கண்டார். தன்னை வரையச் சொன்னது மாதாதான் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். பின்பு, இந்த அருட்சகோதரி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, உடனே கன்னியர் மடத்தின் தலைவியிடம் போய் நடந்தவற்றைச் சொன்னார். மடத் தலைவி அவர் சொன்னதை நம்பாமல், மீண்டும் போய் உறங்கச் சொன்னார். இந்த அருட்சகோதரி தன்னுடைய அறைக்குப் போனவுடன், அங்கு ஒரு அற்புதமான காட்சியைக் கண்டார். அறையினுள் இருந்து பிரகாசமான ஒளி வீசியது. அங்கே தேவமாதாவின் படம் அதிசயமான முறையில் தோன்றியிருப்பதைக் கண்டு வியந்தார். அந்தப் படத்தை கெத்சமனிக்குக் கொண்டுபோகும்படி மாதா கேட்டுக்கொண்டார். இவ்வாறே, இந்த அற்புதமான படம் கெத்சமனியிலுள்ள மாதாவின் கல்லறைக்கு வந்து சேர்ந்தது. இன்றுவரை அது “மனித கைகளால் வரையப்படாத படம்” என்றே போற்றப்படுகிறது. 1955ஆம் ஆண்டு, மாதாவின் கல்லறை இருந்த கெத்சமனி பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்போது, மாதாவின் கல்லறை அமைந்துள்ள ஆலயமும், அங்கிருந்த பல திருப்படங்களும் வெள்ளநீரில் மூழ்கின. இதன்போது, அங்கிருந்த மாதாவின் அற்புதமான இந்தப் படம் மாத்திரம் தானாகவே மேல்நோக்கி உயர்ந்து, கூரையை அடைந்து, கல்லறைக்கு அருகிலிருந்த சுவரில் நின்றது! சுமார் ஐந்து நாட்கள் வெள்ளநீரால் சூழப்பட்டிருந்தபோதும், அந்த அன்னையின் படத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இப்படியான அநேக அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமன்றி, உலகிலுள்ள தேவமாதாவின் படங்கள் அனைத்திலும் இந்தத் திருப்படமே அவருடைய உண்மையான முகத்தை ஒத்ததாக இருக்கிறது என சிலர் நம்புகிறார்கள். கிரேக்க நாட்டின் அதோஸ் மலையில் வாழ்ந்த பைசியோஸ் எனும் துறவி, மாதாவைக் காட்சியாகக் காணும் வரத்தைப் பெற்றார். அவரிடம் ஒருவர், மரியன்னையின் தோற்றத்துடன் மிகவும் ஒத்திருக்கும் திருவுருவம் எது என்று கேட்டபோது, எருசலேமிலுள்ள இந்தப் படமே மாதாவின் தோற்றத்துடன் மிகவும் ஒத்திருக்கிறது எனப் பதிலளித்தார். மகா பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எருசலேமிலுள்ள கெத்சமனி எனும் இடத்தில் தேவமாதாவின் வெறுமையான கல்லறை உள்ளது. மாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு ஆரோபணமாவதற்கு முன்பு, அப்போஸ்தலர்கள் இந்தக் கல்லறையில் அவருடைய திருச்சரீரத்தை அடக்கம் செய்தார்கள். மூன்று நாட்களாக மாதாவின் திருவுடல் அங்கே இருந்தது. இந்தக் கல்லறையில் மாதாவின் அற்புதமான ஒரு படம் இருக்கிறது. கி.பி. 1870ஆம் ஆண்டு, ஒரு அருட்சகோதரி உறங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார். அதில் ஒரு பெண் அவரிடம் வந்து, தனது படத்தை வரையும்படி கேட்டார். அருட்சகோதரியோ, தன்னிடம் படம் வரையப் பலகை எதுவும் இல்லை என்றார். அப்போது அந்தப் பெண் அருட்சகோதரியிடம் ஒரு பலகையைக் கொடுத்து, அதில் தன்னுடைய படத்தை வரையும்படி கூறினார். அருட்சகோதரியும் அந்தப் பெண்ணை வரையத் தொடங்கினார். இதன்போது, அந்தப் பெண்ணின் ஆடை பொன்னிறமாக மாறுவதையும், முகத்திலிருந்து பிரகாசமான ஒளி வீசுவதையும் கண்டார். தன்னை வரையச் சொன்னது மாதாதான் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். பின்பு, இந்த அருட்சகோதரி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, உடனே கன்னியர் மடத்தின் தலைவியிடம் போய் நடந்தவற்றைச் சொன்னார். மடத் தலைவி அவர் சொன்னதை நம்பாமல், மீண்டும் போய் உறங்கச் சொன்னார். இந்த அருட்சகோதரி தன்னுடைய அறைக்குப் போனவுடன், அங்கு ஒரு அற்புதமான காட்சியைக் கண்டார். அறையினுள் இருந்து பிரகாசமான ஒளி வீசியது. அங்கே தேவமாதாவின் படம் அதிசயமான முறையில் தோன்றியிருப்பதைக் கண்டு வியந்தார். அந்தப் படத்தை கெத்சமனிக்குக் கொண்டுபோகும்படி மாதா கேட்டுக்கொண்டார். இவ்வாறே, இந்த அற்புதமான படம் கெத்சமனியிலுள்ள மாதாவின் கல்லறைக்கு வந்து சேர்ந்தது. இன்றுவரை அது “மனித கைகளால் வரையப்படாத படம்” என்றே போற்றப்படுகிறது. 1955ஆம் ஆண்டு, மாதாவின் கல்லறை இருந்த கெத்சமனி பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்போது, மாதாவின் கல்லறை அமைந்துள்ள ஆலயமும், அங்கிருந்த பல திருப்படங்களும் வெள்ளநீரில் மூழ்கின. இதன்போது, அங்கிருந்த மாதாவின் அற்புதமான இந்தப் படம் மாத்திரம் தானாகவே மேல்நோக்கி உயர்ந்து, கூரையை அடைந்து, கல்லறைக்கு அருகிலிருந்த சுவரில் நின்றது! சுமார் ஐந்து நாட்கள் வெள்ளநீரால் சூழப்பட்டிருந்தபோதும், அந்த அன்னையின் படத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இப்படியான அநேக அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமன்றி, உலகிலுள்ள தேவமாதாவின் படங்கள் அனைத்திலும் இந்தத் திருப்படமே அவருடைய உண்மையான முகத்தை ஒத்ததாக இருக்கிறது என சிலர் நம்புகிறார்கள். கிரேக்க நாட்டின் அதோஸ் மலையில் வாழ்ந்த பைசியோஸ் எனும் துறவி, மாதாவைக் காட்சியாகக் காணும் வரத்தைப் பெற்றார். அவரிடம் ஒருவர், மரியன்னையின் தோற்றத்துடன் மிகவும் ஒத்திருக்கும் திருவுருவம் எது என்று கேட்டபோது, எருசலேமிலுள்ள இந்தப் படமே மாதாவின் தோற்றத்துடன் மிகவும் ஒத்திருக்கிறது எனப் பதிலளித்தார். மகா பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

About