@con.l.mia.y:

CON LÀ MI A ĐÂY
CON LÀ MI A ĐÂY
Open In TikTok:
Region: VN
Tuesday 15 September 2026 12:16:33 GMT
67
1
0
3

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @con.l.mia.y, please go to the Tikwm homepage.

Other Videos

பேஸ்புக் மூலம் அறிமுகமான கிளிநொச்சி காதலியைச் சந்திப்பதற்காக, இந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வந்த 17 வயது இந்தியச் சிறு* வன் ஒருவனை இலங்கை கடற்படையினர் மன்னாரில் *கை*து செய்துள்ளனர். இந்தியாவில் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர், பேஸ்புக் தளத்தின் மூலம் இலங்கையின் கிளிநொச்சி முளங்காவில் பகுதியைச் சேர்ந்த சி**றுமி ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளது. காதலியின் அழைப்பை ஏற்று அவளை நேரில் சந்திக்க இலங்கை வர அச்சிறுவன் திட்டமிட்டுள்ளான். ஆனால், சட்டவிரோதப் படகுப் பயணத்திற்குத் தேவையான பண வசதி அவனிடம் இருக்கவில்லை. இதனால், தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் படகோட்டியிடம் கட்டணமாகக் கொடுத்துப் பயணமாகியுள்ளான். இலங்கைக்கு அழைத்து வந்த படகோட்டி, அச்சிறுவனை மன்னார் தம்மன்ன கடற்படை முகாமிற்குட்பட்ட ஆதமின் பாலம் பகுதியிலுள்ள 6-வது மணல் திட்டில்  தனியாக இறக்கிவிட்டு, மீண்டும் இந்தியாவிற்குத் தப்பியோடியுள்ளான். செப்டம்பர் 11 மாலை வேளையில், அப்பகுதியில் வழக்கமான கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த  அதிகாரிகள், மணல் திட்டில் தனியாக நின்றிருந்த சிறுவனைக் கண்டு சந்தேகமடைந்து அவனை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், காதலியின் புகைப்படம், காதலி எழுதிய காதல் கடிதம், 280 இந்திய பணம்  ஆகியவை கைப்பற்றப்பட்டன. தற்போது பொலீஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்பின் தெரியாத நபர்களுடன் இணையத்தில் பழகும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக எல்லை தாண்டுவது ஆ*பத்*தாக முடியலாம்.
பேஸ்புக் மூலம் அறிமுகமான கிளிநொச்சி காதலியைச் சந்திப்பதற்காக, இந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வந்த 17 வயது இந்தியச் சிறு* வன் ஒருவனை இலங்கை கடற்படையினர் மன்னாரில் *கை*து செய்துள்ளனர். இந்தியாவில் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர், பேஸ்புக் தளத்தின் மூலம் இலங்கையின் கிளிநொச்சி முளங்காவில் பகுதியைச் சேர்ந்த சி**றுமி ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளது. காதலியின் அழைப்பை ஏற்று அவளை நேரில் சந்திக்க இலங்கை வர அச்சிறுவன் திட்டமிட்டுள்ளான். ஆனால், சட்டவிரோதப் படகுப் பயணத்திற்குத் தேவையான பண வசதி அவனிடம் இருக்கவில்லை. இதனால், தான் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் படகோட்டியிடம் கட்டணமாகக் கொடுத்துப் பயணமாகியுள்ளான். இலங்கைக்கு அழைத்து வந்த படகோட்டி, அச்சிறுவனை மன்னார் தம்மன்ன கடற்படை முகாமிற்குட்பட்ட ஆதமின் பாலம் பகுதியிலுள்ள 6-வது மணல் திட்டில் தனியாக இறக்கிவிட்டு, மீண்டும் இந்தியாவிற்குத் தப்பியோடியுள்ளான். செப்டம்பர் 11 மாலை வேளையில், அப்பகுதியில் வழக்கமான கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், மணல் திட்டில் தனியாக நின்றிருந்த சிறுவனைக் கண்டு சந்தேகமடைந்து அவனை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், காதலியின் புகைப்படம், காதலி எழுதிய காதல் கடிதம், 280 இந்திய பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. தற்போது பொலீஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்பின் தெரியாத நபர்களுடன் இணையத்தில் பழகும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக எல்லை தாண்டுவது ஆ*பத்*தாக முடியலாம்.

About