@6htc:

انس العسيري🐆
انس العسيري🐆
Open In TikTok:
Region: SA
Saturday 19 September 2026 17:26:29 GMT
192
31
0
1

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @6htc, please go to the Tikwm homepage.

Other Videos

சிவராசா அனோஜனின் அன்பு தாய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது அன்பான ஆறுதலையும் வேண்டுகோளையும் இவ்விடத்தில் பகிர்ந்துகொள்கின்றேன். உங்கள் அன்பு மகன் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு பொய்யான வதந்தியே தவிர அப்படி ஒன்று இடம்பெறவில்லை எனவே முதலில் உங்களது மனதை அமைதிப்படுத்திக்கொள்ளுங்கள்.மரணதண்டனை வழங்கப்படுவதாக இருந்தால் அதன்முன் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். அதாவது முதலில் விசாரணை நீதிமன்றம் (Trial court) தீர்ப்பை வழங்கும். பின்பு குற்றவாளி மேல்முறையீடு செய்யாவிட்டாலும், மரண தண்டனைக்கான தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் தானாகவே மறுஆய்வு செய்யும், இந்த மறுஆய்வுகளுக்குப் பின்னரே தண்டனை இறுதியாகும். சில சந்தர்ப்பங்களில், சவூதி சட்ட நடைமுறைகளின்படி கூடுதல் ஒப்புதலும் தேவைப்படலாம். அனோஜன் விடயத்தில் ஒருவேளை தண்டனை கொடுக்கப்பட்டால் மரண தண்டனையை மாற்றியமைக்க முடியுமா என்ற கேள்வியும் எழலாம்? ஆம் அவரின் விடயத்தில் மேல்முறையீடு அல்லது நீதித்துறை மறுஆய்வின் போது, சவூதி நீதிமன்றம் பின்வருவனவற்றைச் செய்யலாம். மரண தண்டனையை உறுதிப்படுத்தலாம், குற்றத் தீர்ப்பை ரத்து செய்யலாம், மறுவிசாரணைக்கு உத்தரவிடலாம், அல்லது சட்ட மற்றும் நடைமுறைசார் பிழைகள் கண்டறியப்பட்டால் தண்டனையைக் குறைக்கலாம். எனவே, அனோஜனின் வழக்கு இன்னும் மேல்முறையீடு அல்லது மறுஆய்வு நிலையில் இருந்தால், அந்த மறுஆய்வு செயல்முறை முடியும் வரை சட்டப்படிதண்டனையை நிறைவேற்ற முடியாது. எனவே இதுவரைக்கும் சமூக வலைத் தளங்களில் பரவிவரும் மரண தண்டனை தகவல்கள் முற்றிலும் பொய்யானது எனவே போலி வதந்திகளை நம்பி கண்ணீர் விட்டு உங்களை காயப்படுத்திக்கொள்ளாம் முதலில் மனதை ஆறுதல்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மகனை காப்பாற்றுவதற்கு சவூதி அரேபியாவை பொறுத்தவரையில் அரசியல் முயற்சிகள் கைகொடுக்கும் என்பதற்கான சாத்தியப்பாடுகள் மிகக்குறைவு, அதற்காக அதை செய்யவேட்டாம் முயற்சிக்கவேண்டாம் என்று கூறவில்லை, ஆனால் அதற்க்கு ஒருபடி மேல் சென்று உங்கள் அன்பு மகனை காப்பாற்றுவதற்கு நீங்கள் தாமதிக்காமல் தற்போது உடனடியாக செய்யவேண்டிய விடயம் யாதெனில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை நாடி அவர்களை சவுதி நீதி அமைச்சகத்தை தொடர்புகொண்டு பேசச்சொல்குங்கள், குறிப்பாக ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் உட்பட ஒரு குழு சவுதி சென்று நேரடியாக நீதித்துறை அதிகாரிகளை சந்தித்து(ஜம்மியத்துல் உலமா சபையுடன் முஸ்லீம் அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொள்வது சிறந்தது) அனோஜன் இப்படி நடந்ததற்கான அடிப்படை நிலைமையை விளக்கி அதை இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் அனோஜனை மன்னித்துவிட்டோம் நீங்களும் மன்னித்துவிடுங்கள் என்று மன்றாடும்போது அவர்கள் அதை உணர்ந்து அவர்களுடையமேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மறுஆய்வுக்கு உட்படுத்தி 5 வருட சிறைத்தண்டனையையும் தண்டப்பணத்தையும்கூட குறைத்து அனோஜனை விரைவில் விடுதலை செய்யும் அதிக சாத்தியம் உள்ளது. எனவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர் சவுதி சென்று வரும் அனைத்து செலவீனங்களையும் அனோஜன் சார்பாக தமிழ் சமூகம் பொறுப்பேற்று தேவைப்பட்டால் அல்லது விரும்பினால் அனோஜனின் தாயாகிய நீங்களும் சவுதி சென்று மகனையும் பார்க்க அனுமதி பெற்று பார்த்துவிட்டு வர முடியும். எனவே தாமதியாது ஜம்மியத்துல் உலமா சபையிடம் உங்கள் அன்பான கோரிக்கையை உங்கள் அரசியல்வாதிகளினூடாகவாவது முன்வைத்த உடனடி முயற்சியை மேற்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும் அனோஜன் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் தண்டனை குறைப்புடன் விரைவில் விடுதலையாகி வீடு திரும்புவார். உங்களுடைய அன்பு மகன் மிக விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்
சிவராசா அனோஜனின் அன்பு தாய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது அன்பான ஆறுதலையும் வேண்டுகோளையும் இவ்விடத்தில் பகிர்ந்துகொள்கின்றேன். உங்கள் அன்பு மகன் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு பொய்யான வதந்தியே தவிர அப்படி ஒன்று இடம்பெறவில்லை எனவே முதலில் உங்களது மனதை அமைதிப்படுத்திக்கொள்ளுங்கள்.மரணதண்டனை வழங்கப்படுவதாக இருந்தால் அதன்முன் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். அதாவது முதலில் விசாரணை நீதிமன்றம் (Trial court) தீர்ப்பை வழங்கும். பின்பு குற்றவாளி மேல்முறையீடு செய்யாவிட்டாலும், மரண தண்டனைக்கான தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் தானாகவே மறுஆய்வு செய்யும், இந்த மறுஆய்வுகளுக்குப் பின்னரே தண்டனை இறுதியாகும். சில சந்தர்ப்பங்களில், சவூதி சட்ட நடைமுறைகளின்படி கூடுதல் ஒப்புதலும் தேவைப்படலாம். அனோஜன் விடயத்தில் ஒருவேளை தண்டனை கொடுக்கப்பட்டால் மரண தண்டனையை மாற்றியமைக்க முடியுமா என்ற கேள்வியும் எழலாம்? ஆம் அவரின் விடயத்தில் மேல்முறையீடு அல்லது நீதித்துறை மறுஆய்வின் போது, சவூதி நீதிமன்றம் பின்வருவனவற்றைச் செய்யலாம். மரண தண்டனையை உறுதிப்படுத்தலாம், குற்றத் தீர்ப்பை ரத்து செய்யலாம், மறுவிசாரணைக்கு உத்தரவிடலாம், அல்லது சட்ட மற்றும் நடைமுறைசார் பிழைகள் கண்டறியப்பட்டால் தண்டனையைக் குறைக்கலாம். எனவே, அனோஜனின் வழக்கு இன்னும் மேல்முறையீடு அல்லது மறுஆய்வு நிலையில் இருந்தால், அந்த மறுஆய்வு செயல்முறை முடியும் வரை சட்டப்படிதண்டனையை நிறைவேற்ற முடியாது. எனவே இதுவரைக்கும் சமூக வலைத் தளங்களில் பரவிவரும் மரண தண்டனை தகவல்கள் முற்றிலும் பொய்யானது எனவே போலி வதந்திகளை நம்பி கண்ணீர் விட்டு உங்களை காயப்படுத்திக்கொள்ளாம் முதலில் மனதை ஆறுதல்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மகனை காப்பாற்றுவதற்கு சவூதி அரேபியாவை பொறுத்தவரையில் அரசியல் முயற்சிகள் கைகொடுக்கும் என்பதற்கான சாத்தியப்பாடுகள் மிகக்குறைவு, அதற்காக அதை செய்யவேட்டாம் முயற்சிக்கவேண்டாம் என்று கூறவில்லை, ஆனால் அதற்க்கு ஒருபடி மேல் சென்று உங்கள் அன்பு மகனை காப்பாற்றுவதற்கு நீங்கள் தாமதிக்காமல் தற்போது உடனடியாக செய்யவேண்டிய விடயம் யாதெனில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை நாடி அவர்களை சவுதி நீதி அமைச்சகத்தை தொடர்புகொண்டு பேசச்சொல்குங்கள், குறிப்பாக ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் உட்பட ஒரு குழு சவுதி சென்று நேரடியாக நீதித்துறை அதிகாரிகளை சந்தித்து(ஜம்மியத்துல் உலமா சபையுடன் முஸ்லீம் அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொள்வது சிறந்தது) அனோஜன் இப்படி நடந்ததற்கான அடிப்படை நிலைமையை விளக்கி அதை இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் அனோஜனை மன்னித்துவிட்டோம் நீங்களும் மன்னித்துவிடுங்கள் என்று மன்றாடும்போது அவர்கள் அதை உணர்ந்து அவர்களுடையமேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மறுஆய்வுக்கு உட்படுத்தி 5 வருட சிறைத்தண்டனையையும் தண்டப்பணத்தையும்கூட குறைத்து அனோஜனை விரைவில் விடுதலை செய்யும் அதிக சாத்தியம் உள்ளது. எனவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர் சவுதி சென்று வரும் அனைத்து செலவீனங்களையும் அனோஜன் சார்பாக தமிழ் சமூகம் பொறுப்பேற்று தேவைப்பட்டால் அல்லது விரும்பினால் அனோஜனின் தாயாகிய நீங்களும் சவுதி சென்று மகனையும் பார்க்க அனுமதி பெற்று பார்த்துவிட்டு வர முடியும். எனவே தாமதியாது ஜம்மியத்துல் உலமா சபையிடம் உங்கள் அன்பான கோரிக்கையை உங்கள் அரசியல்வாதிகளினூடாகவாவது முன்வைத்த உடனடி முயற்சியை மேற்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும் அனோஜன் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் தண்டனை குறைப்புடன் விரைவில் விடுதலையாகி வீடு திரும்புவார். உங்களுடைய அன்பு மகன் மிக விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்

About