@eporichie01:

Oluwadamilare🤭
Oluwadamilare🤭
Open In TikTok:
Region: NG
Saturday 19 September 2026 18:27:38 GMT
5539
657
2
8

Music

Download

Comments

ajoke.baby169
Ajoke baby ❤️ 💖 :
🥰🥰🥰
2026-09-19 21:08:23
0
arafat.daichi
Arafat Daichi :
❤️❤️❤️
2026-09-20 02:13:15
0
To see more videos from user @eporichie01, please go to the Tikwm homepage.

Other Videos

அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்🚨 மட்டக்களப்பு சர்வமத ஒன்றியம்! சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் வலிறுத்தியுள்ளது. இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளது. எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம். எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம்  என்றுமே ஆதரவு வழங்குவதில்லை. அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது. இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம். எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய   நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். மேற்படிச்  சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் என்றுள்ளது. #LocalNews #BreakingNews #SocialMediaViral #Justice #SrilankaNews
அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்🚨 மட்டக்களப்பு சர்வமத ஒன்றியம்! சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் வலிறுத்தியுள்ளது. இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளது. எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம். எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை. அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது. இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம். எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் என்றுள்ளது. #LocalNews #BreakingNews #SocialMediaViral #Justice #SrilankaNews

About